தினகரன் 10.06.2010
முறையற்ற குடிநீர் இணைப்பு ஆணையர் எச்சரிக்கை
பண்ருட்டி, ஜூன் 10: பண்ருட்டி நகராட்சி ஆணையாளர் உமா மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பண்ருட்டி நகராட்சியில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வைத்துள்ளோர் தங்களது வீட்டு குடிநீர் இணைப்பை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். முறையற்ற வீட்டு குடிநீர் இணைப்பு வைத்துள் ளவர்கள் வரும் 20ம் தேதிக்குள் பண்ருட்டி நகராட்சியை அணுகவும். முறையற்ற வீட்டு குடிநீர் இணைப்புகள் கண்டு பிடிக்கப்பட்டால் துண்டிக்கப்படும். சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.