Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி கட்டாதவர்களின் சொத்துக்கள் சீல் வைக்கப்படும்

Print PDF

தினகரன் 14.06.2010

வரி கட்டாதவர்களின் சொத்துக்கள் சீல் வைக்கப்படும்

நாக்பூர், ஜூன் 14: நாக்பூரில் 15 நாட்களுக்குள் சொத்து வரி கட்டவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரித்துள் ளார்.

நாக்பூர் மாநகராட்சியின் புதிய கமிஷனர் சஞ்சய் ஜெய்ஸ்வால் இது தொடர் பாக அளித்த பேட்டியில் கூறியதாவது; நாக்பூரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஏராளமானோர் தங்களது சொத்துக்களை பதிவு செய்துகொள்ளாமல் இருக் கின்றனர். உடனே தேவை யான ஆவணங்களை தாக்கல் செய்து சொத்துக்களை பொதுமக்கள் பதிவு செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொள்ள வில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

அதேபோல் ஏற்கனவே சொத்துக்களை பதிவுசெய்த வர்கள் 15 நாட்களுக்குள் தங்களது சொத்து வரியை செலுத்தவில்லை என்றால் சொத்துக்கள் சீல் வைக்கப் படும் என்றும் தெரிவித்தார்.