Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் கட்டிடம் கட்ட அனுமதிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை

Print PDF

தினகரன் 14.06.2010

அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் கட்டிடம் கட்ட அனுமதிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை

புதுடெல்லி, ஜூன் 14: அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று வருவாய்த்துறை அமைச்சர் ராஜ்குமார் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி நிருபர்களிடம் அமைச்சர் ராஜ் குமார் சவுகான் கூறியதாவது:

டெல்லியில் இப்போது 1,639 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புக்கள் உள்ளன. அவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பது பற்றி மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் மேலும் சில புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக அரசுக்கு புகார்கள் வருகின்றன. இப்படிப்பட்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இதற்கு அனுமதிக்கும் துணை கலெக்டர், போலீஸ் துணை கமிஷனர், வருவாய்த்துறை துணை ஆணையாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கள் பகுதிகளில் அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களை போலீசாரின் உதவியுடன் அகற்ற தேவையான நடவடிக்கையை துணை கலெக்டர் எடுக்க வேண்டும்.

அதேபோல இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நில புரோக்கர்கள், நில சொந்தக்காரர்கள், மற்றும் கட்டிட காண்டிராக்ரடர்கள் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில், நில புரோக்கர்கள் மற்றும் சிலர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருந்த அரசுக்கு சொந்தமான 136.5 ஏக்கர் நிலத்தை மீட்டு இருக்கிறோம். மேலும் சிலர் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க தேவையான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இவ்வாறு வருவாய்த்துறை அமைச்சர் ராஜ் குமார் சவுகான் கூறினார்.