Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ75 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் நகராட்சி அலுவலக கட்டிடம் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

Print PDF

தினகரன் 15.06.2010

ரூ75 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் நகராட்சி அலுவலக கட்டிடம் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

திருப்பூர், ஜூன் 15:15 வேலம்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு, ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை அமைச் சர் சாமிநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

திருப்பூர் அடுத்துள்ள 15 வேலம்பாளையம் மூன்றாம் நிலை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டு வரி செலுத்தி வருகின்றனர். 11 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது.

15 வேலம்பாளையம் நகராட்சியானது, ஊராட்சியாக இருந்து பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் பேரூராட்சியாக இருந்தபோது அலுவலகத்தில் எத்தனை ஊழியர்கள் இருந்தார்களோ? அதே அளவுக்கு தான் தற்போதும் உள்ளனர். அதே போல் நகராட்சி அலுவலகமும் எந்த வித வசதியும் இன்றி இருந்து வந்தது. இதனால் வரி கட்ட வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் நகர் மன்ற கூட்ட அரங்கமும் வசதி இல்லாமல் இருந்து வந்தது.

இதையடுத்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நகர்மன்ற கூட்டத்தில் சகல வசதியுடன் கூடிய புதிய நகராட்சி அலுவலகத்தை சந்தைப்பேட்டை இருந்த இடத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் அதை தீர்மானமாக நிறைவேற்றி திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு அனுமதி கிடைத்ததும் கட்டிடம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பணிகள் நடந்து வந்தது. இதன் பணி தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது ரூ. 75 லட்சம் செலவு செய்யப்பட்டுள்தாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் கலெக் டர் சமயமூர்த்தி ஆகியோர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நகராட்சித் தலைவர் எஸ்.பி.மணி, செயல் அலுவலர் குற்றாலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர். இன்னும் ஓரிரு மாதத்திற்குள் புதிய அலுவலகம் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.