தினமணி 28.06.2010
குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 20 மின்மோட்டார்கள் பறிமுதல் நகராட்சி ஆணையாளர் அதிரடி
செய்யாறு, ஜூன்28: செய்யாறில் நகராட்சி ஆணையாளர் நடத்திய சோதனையில் வீடுகளில் குடிநீர் உறிஞ்ச குழாய் இணைப்புகளில் பொருத்தியிருந்த 20 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்யாறு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சுமார் 3 ஆயிரத்து 700 குழாய் இணைப்புகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யபடுகிறது. இந்த குழாய் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் விடும் போது ஊறிஞ்சி எடுப்பதாகவும், அதனால் போதிய குடிநீர் கிடைப்பதில்லை எனவும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) எம்.ராஜாவுக்கு புகார்கள் வந்தன.
அதன் பேரில் பொதுப்பணி மேற்பார்வையாளர் ராமன் தலைமையில் பிட்டர்கள் மோகன், பஞ்சாட்சரம் ஆகியோர் காமராஜர் நகர் பகுதியில் கடந்த 24ம் தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 வீட்டின் குழாய் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் ஊறிஞ்சியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக 3 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.