Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாயர்புரம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரகாஷ் ஆய்வு

Print PDF

தினகரன் 28.06.2010

சாயர்புரம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரகாஷ் ஆய்வு

ஏரல், ஜூன் 28: சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.

சாயர்புரம் பேரூராட்சியில் நபார்டு திட்டம், எம்பி மற்றும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டம், 12வது நிதிக்குழு திட்டம், கலெக்டர் விருப்புரிமை நிதி திட்டம் ஆகியவற்றின் கீழ் தார்சாலை, சிமென்ட் சாலை, பயணிகள் நிழற்குடை அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை ஷெட் அமைத்தல் போன்ற திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை கலெக்டர் பிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் சாயர்புரம் புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டார்.

பேரூராட்சி தலைவர் பொன்சேகர், நிர்வாக அதிகாரி தனசிங், உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் மணி, சாயர்புரம் ஜெபர்சன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.