Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

6 கடைகளுக்கு நேற்று சீல் நடவடிக்கை தொடரும் என கமிஷனர் அதிரடி

Print PDF

தினமலர் 20.07.2010

6 கடைகளுக்கு நேற்று சீல் நடவடிக்கை தொடரும் என கமிஷனர் அதிரடி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் வாடகை செலுத்தாத மாநகராட்சி 6 கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்ட து. தொடர்ந்து இந்த அதிரடி தொடரும் என்று கமிஷனர் குபேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பாக்கிகளை வசூல் செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. மாநகராட்சி புதிய கட்டடம், பக்கிள் ஓடை சீரமைப்பு, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளுக்கு மாநகராட்சியின் பங்கு தொகையை செலுத்த வேண்டியுள்ளது. பல கோடி ரூபாய் வரி பாக்கி இருக்கும் போது மாநகராட்சியால் அதனை செலுத்த முடியாமல் திண்டாட்டம் ஏற்பட்டது.

இதனால் வரிகளை வசூல் செய்ய மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சொத்துவரி செலுத்தாத வீடுகளில் ஜப்தி நடவடிக் கை எடுக்கப்படும் என்றும், குடிநீர் கட்டணம் செ லுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விட ப்பட்டது. இதனை தொடர் ந்து பல லட்ச ரூபாய் வரி பாக்கி வசூல் ஆகி வருகிறது. இந் நிலையில் மாநகராட்சி கடைகளிலும் வியாபாரிகள் அதிகமாக மாநகராட்சிக்கு வாடகை பாக்கியை செலுத்தாமல் வைத்துள்ளனர். ஒவ்வொரு கடையிலும் 8 மாதம், பத்து மாதம் என்று பாக்கி வைத்துள்ளனர். மாநகராட்சியில் இரு ந்து பலமுறை வரி பாக்கிø ய செலுத்துமாறு கேட்டும் வியாபாரிகள் வாடகை பாக்கியை செலுத்தாமல் இருந் து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடைகளை பூட்டி சீல் வைக்க மாநகராட்சி முடிவு செய்தது. மாநகராட்சி வருவாய் பிரிவு ஊழியர்கள் நேற்று புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் வாடகைப் பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைத்தனர். புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடை வியாபாரிகள் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை பூட்டினர். இருப்பினும் மாநகராட்சியினர் வாடகை பாக்கியுள்ளவர்களின் கடைகளை பூட்டு போடும் பணியில் தீ விரம் காட்டினர்.

இது குறித்து கமிஷனர் குபேந்திரன் கூறியதாவது;தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கும், கடைகள் கட்டுவததற்கும் சென்னை நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று கட்டப்பட்டுள்ளது. அந்த கடனை மாநகராட்சி செலு த்த வேண்டும். ஆனால் கø டகளில் உள்ளவர்கள் வாடகையை முறையாக செலுத்தாததால் நிதி நிறுவனத்தினர் வட்டி, அபராத வட்டி போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த கடனை திரும்ப செலுத்த சொல்லி சென்னை நிதி நிறுவத்தில் இருந்து மாநகராட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வருகிறது.இதனால் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை மாநகராட்சி சார்பில் பூட்டு போட முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை துவக்கப்பட்டுள் ளது. நேற்று 6 கடைகளில் பூட்டு போடப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 8 லட்ச ரூபாய் வாடகை பணம் வசூல் ஆகியுள்ளது.தொடர்ந்து இது போன்ற நடவடிக்கை தொ டரும். இதனால் வியாபாரிகள் முறையாக வாடகை பாக்கியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு குபேந்திரன் தெரிவித்தார். .