தினமலர் 22.07.2010
பொது இடங்களில் புகை பிடித்தால் விரைவில் எந்திரம் மூலம் அபராதம்
திருநெல்வேலி : பொது இடங்களில் புகை பிடிப்பவர்களிடம் விரைவில் எந்திரம் மூலம் அபராதம் விதிக்கும் முறை விரைவில் அமல்படுத்தப்படுகிறது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் புதிய பஸ்ஸ்டான்டில் அனுமதியற்ற இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள், புகை பிடிப்பவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
இதனை செயல்படுத்த நவீன தொழில் நுட்ப உத்தியுடன் கூடிய எந்திரம் பயன்படுத்தி அபராதம் விதித்து உடனடியாக ரசீது வழங்கும் முறை புதியதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. விரைவில் இதற்கான எந்திரம் வாங்கப்பட்டு பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.