தினமணி 22.07.2010
துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பு
கடையநல்லூர், ஜூலை 21: கடையநல்லூர் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம் தலைமை வகித்து, 90 துப்புரவுப் பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.
இதில் ஆணையர் அப்துல் லத்தீப், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம், பிச்சையாபாஸ்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் பாட்ஷா, பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.