Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேட்டூர் அணை பகுதியில் தனி குழுவினர் ஆய்வு

Print PDF

தினமணி 23.07.2010

மேட்டூர் அணை பகுதியில் தனி குழுவினர் ஆய்வு

மேட்டூர், ஜூலை 22: மேட்டூர் அணையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் குறித்து, தனி குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மேட்டூர் அணையிலிருந்து 15 டி.எம்.சி தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு பரிசீலிக்க உள்ளது. இதற்காக மேட்டூர் அணைப் பகுதியில் நீரேற்று நிலையம் எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னையிலிருந்து 3 பேர் அடங்கிய குழுவினர் மேட்டூருக்கு வியாழக்கிழமை வந்தனர்.

அணையின் பல பகுதிகளிலும் படகில் சென்று இக்குழுவினர் ஆய்வு செய்தனர். இக்குழுவினர், திட்ட மதிப்பீடு மற்றும் நீரேற்று நிலையம் அமைக்க உகந்த இடம் குறித்து பரிந்துரை செய்தால் இதுகுறித்து அரசு பரிசீலிக்கும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.