Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி உடனடி நடவடிக்கை

Print PDF

தினமணி 28.07.2010

நகராட்சி உடனடி நடவடிக்கை

உடுமலை, ஜூலை 27: மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் ஆபத்தாக இருந்து வந்த படுகுழியை மூடி, உடுமலை நகராட்சி உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

உடுமலை, தளி ரோட்டில் புதிய ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதை ஒட்டி வாகனங்கள் செல்ல மாற்றுப் பாதைகள் அமைக்கப்பட்டன. இதில் பிஏ மில்ஸ் பின்புறம் யூனியன் அலுவலகம் செல்லும் திருப்பம் ஒன்றில் உள்ள ஒரு பாலத்தில் ஆளை விழுங்கும் அபாய மரணக்குழி ஏற்பட்டிருந்தது. இது குறித்து தினமணியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக, உடுமலை நகராட்சி அந்த மரணக் குழியை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென தொகையை ஒதுக்கப்பட்டு கடந்த சில தினங்களாக நடந்து வந்த பணிகள் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.