Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவில்பட்டியில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி 01.08.2009

கோவில்பட்டியில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்

கோவில்பட்டி, ஜூலை 31: கோவில்பட்டி நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான கடைகள் புதுரோடு, ஊரணி தெரு, .கே.எஸ். தியேட்டர் சாலை மற்றும் அண்ணா பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ளன.

இதில், புதுரோட்டில் எம்எல்ஏ அலுவலகத்திற்கு எதிரேயுள்ள கட்டடத்தின் 2 கடைகாரர்கள், ஊரணி தெரு காமராஜர் சிற்றாங்காடி பகுதியிலுள்ள 3 கடைக்காரர்கள் மற்றும் அண்ணா பேருந்து நிலைய வளாகத்திலுள்ள ஒரு கடைக்காரர் ஆகியோர் நீண்ட காலமாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனராம்.

இதையடுத்து, நகர்மன்றக் கூட்டத்தில் வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சேதுராஜன் உத்தரவின் பேரில் சீல் வைக்கும் பணி நகராட்சி வருவாய் அலுவலர் சிவராஜேந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் யுகராஜ், கே.முருகேசன், நகரமைப்பு ஆய்வாளர்கள் ரமேஷ், செல்வ சந்தன சேகர் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.