தினகரன் 30.07.2010
நகராட்சியிடம் அனுமதி பெறாத 94 செல்போன் டவர்களுக்கு ‘சீல்’
மும்பை: மகாராஷ்டிராவில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட செல்போன் டவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்ததால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் 96 செல்போன் டவர்கள் உள்ளன. இவற்றில் 2 டவர்கள் மட்டுமே சட்டபூர்வமானவை. அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக நிறுவப்பட்ட மீதி 94 செல்போன் டவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைக்கத் தொடங்கியுள்ளது. இதற்கான பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நான்டெட் பகுதியில் செல்போன் டவர்களுக்கு சீல் வைக்கப்பட்டதால் செல்போன் சேவை பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் செல்போன் இணைப்பு கிடைக்காததால் அவதிப்பட்டனர். இதுவரை 20 செல்போன் டவர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சீல் வைக்கும் பணி நடந்து வருவதாகவும் நான்டெட் நகராட்சி கமிஷனர் தீபக் மாய்ஸ்கர் தெரிவித்தார்.