Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பிலுள்ள தேயிலை தோட்டம் விரைவில் மீட்பு செயல் அலுவலர் உறுதி

Print PDF

தினகரன் 02.08.2010.

ஆக்கிரமிப்பிலுள்ள தேயிலை தோட்டம் விரைவில் மீட்பு செயல் அலுவலர் உறுதி

மஞ்சூர், ஆக.2: நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் தேயி லை தோட்டம் மஞ்சூர்அட்டி பின்புறம் உள்ளது. பல லட்சம் மதிப்புள்ள தேயிலை தோட்ட த்தை பேரூராட்சி நிர்வாகத்தால் நேரடியாக பராமரிக்க முடியவில்லை. எனவே ஆண்டுக்கு ஒரு முறை குத்தகைக்கு தனியாரிடம் விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டியது.

இந்நிலையில், போதிய கண்காணிப்பு இல்லாததால் 10 ஏக்கரும் முழுமையாக தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டு க்கு முன் ஆக்கிரமிப்பிலுள்ள தேயிலை தோட்டத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அரசியல் உள்ளி ட்ட பல்வேறு குறுக்கீடுகள் காரண மாக ஆக்கிரமிப்பு தேயிலை தோட்டத்தை மீட்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் தேயிலை தோட்டம் இருந்து வருகிறது. இந்த 10 ஏக்கரில் மாதந்தோறும் 5 ஆயிரம் கிலோ பசுந்தேயிலை கிடைக்கும். இதன் மூலம் ரூ.30 ஆயிரம் வரை மாதம் கிடைத்தது. ஆக்கிரமிப்பால் கடந்த காலங்களில் பேரூராட்சிக்கு பல லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பேரூராட்சியில் ஆய்வு மேற் கொண்ட உதவி இயக்குனர் செல்வராஜ், ஆக்கிரமிப்பு பகுதிகளை பார்வையிட் டார். கடந்த மாதம் கீழ் குந்தா பேரூராட்சி மன்ற கூட்டத்திலும் ஆக்கிரமிப்பு தேயிலை தோட்டத்தை மீட்க வேண் டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தேயிலை தோட்டத்தை மீட்கும் தீர்மா னம் பேரூராட்சி நிர்வாகத் தால் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயரா மன் கூறுகையில், ‘கீழ்குந்தா பேரூராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பிலுள்ள 10 ஏக்கர் தேயிலை தோட்டத்தை மீட்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகி றது. முதற்கட்டமாக கூடிய விரைவில் வருவாய் துறை மூலம் தோட்டத்தில் சர்வே பணிகள் நடத்தப்படும். பின் னர் தேயிலை தோட்டம் மீட் கப்படும். எதிர்காலத்தில் வேறு யாரும் ஆக்கிரமிப்பு செய்யா மல் இருக்க சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து பேரூராட்சியின் கட்டுப்பாட்டிற் குள் கொண்டு வரப்படும்என்றார்.