Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஊத்துக்கோட்டை பேரூராட்சி எச்சரிக்கை சொத்து வரி செலுத்த தவறினால் ஜப்தி இவ்வாறு கூறியுள்ளார்.

Print PDF

தினகரன் 04.08.2010

ஊத்துக்கோட்டை பேரூராட்சி எச்சரிக்கை சொத்து வரி செலுத்த தவறினால் ஜப்தி இவ்வாறு கூறியுள்ளார்.

ஊத்துக்கோட்டை, ஆக.4: வரும் 31ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்த தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் இரா.பெரியசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டம் 36வது பிரிவின்படி முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும், 2வது அரையாண்டு சொத்து வரியை அக்டோபர் 30ம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

2010&11ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்தும் தேதி கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு பிறகும் சிலர் வரி செலுத்தவில்லை.

அவ்வாறு வரி செலுத்தாத கட்டிட உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் சம்மந் தப்பட்ட கட்டிடத்துக் கான சொத்து வரியை செலுத்த வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டித்தல், ஜப்தி உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.