தினகரன் 05.08.2010
வடக்கநந்தல் பகுதியில் குடிநீர் கட்டணம் செலுத்தாவிடில் இணைப்பு துண்டிக்கப்படும் செயல் அலுவலர் எச்சரிக்கை
சின்னசேலம், ஆக. 5: கள்ளக்குறிச்சியை அடுத்த வடக்கநந்தல் பேரூராட்சி செயல் அலுவலர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வடக்கந்தல் பேரூராட்சியில் அக்கராயபாளையம், கச்சிராயபாளையம், வடக்கநந்தல், அம்மாபேட்டை, வெங்கட்டம்மா பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி மூலம் இணைப்பு பெற்று குடிநீர் பெற்று வருகின்றனர். இதில் ஒரு சிலருக்கு குடிநீர் கட்டணம் செலுத்த சொல்லி நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை கட்ட மறுத்து வருகின்றனர். கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அவர்கள் ம¦து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
மேலும் பேரூராட்சியின் அனுமதியின்றி தெருக்களில் செல்லும் குடிநீர் குழாயில் இணைப்பு பெற்று மின்மோட்டார் மூலம் நீரை உறிஞ்சுகின்றனர். இதனால் அக்கராயபாளையம் உள்ளிட்ட ஒருசில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள் உடனடியாக இணைப்பை துண்டித்து கொள்ள வேண்டும். இல்லையெனில் பேரூராட்சி நிர்வாகம் திடீர் சோதனை செய்து குடிநீர் இணைப்பை துண்டிப்பதுடன் மின்மோட்டாரும் பறிமுதல் செய்யப்படும்.
வடக்கநந்தல் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும். மேலும் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள் உடனே துண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.