தினகரன் 05.08.2010
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அடுப்பு பயன்படுத்திய டீ கடைக்கு சீல்
மதுரை, ஆக. 5:மதுரை பஸ் நிலைய கடைகளில் அடுப்பு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி மாட்டுத் தாவணி பஸ் நிலையத்தில் அடுப்பு பயன்படுத்திய டீ கடைக்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். பஸ் நிலையத்திற்குள் நடைபாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. உதவி ஆணையாளர்கள் ராஜகாந்தி, ஆசைத்தம்பி ஆகியோர் நடத்திய சோதனையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.