Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் வழங்கும் ஏரிகளில் முதன்மை செயலர் ஆய்வு

Print PDF

தினகரன் 06.08.2010

குடிநீர் வழங்கும் ஏரிகளில் முதன்மை செயலர் ஆய்வு

சென்னை, ஆக.6: சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களான பூண்டி நீர்த்தேக்கம், செங்குன்றம் ஏரி, குடிநீர் வழங்கும் நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களை, குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் அஷோக் வர்தன் ஷெட்டி நேற்று ஆய்வு செய்தார்.

பூண்டி நீர்த்தேக்கத்தை பார்வையிட்ட அவர், கிருஷ்ணா நதிநீர் கால்வாய்களை சீர் செய்து, வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டுமென பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கான பரிசோதனை குறிப்புகளை, கணினி மூலம் கண்டறிந்து சரியான முறையில் சுத்திகரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார். அப்போது, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 06 August 2010 08:57