தினகரன் 06.08.2010
வரி இனங்களை 10க்குள் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
தொட்டியம், ஆக. 6: வரும் 10ம் தேதிக்குள் குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் தெரிவித்துள்ளார்.
தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மஞ்சமேடு, தவிட்டுப்பாளையம், அக்ரஹாரம், காட்டுப்புத்தூர் நகர்பகுதி, ஆண்டாபுரம் ரோடு, காந்திநகர் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் பேரூராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற பொதுமக்கள், நிலுவை தொகை மற்றும் இம்மாதத்திற்குரிய தொகையை 10ம் தேதிக்குள் அலுவலக நேரத்தில், வேலை நாட்களில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
தவறினால் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். அபராத தொகை வசூல் செய்த பின்னரே மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். எனவே, பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி உட்பட வரி இனங்களையும் செலுத்த வேண்டும். இவ்வாறு சேகர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.