தினமலர் 25.08.2010
தேனிக்கு புதிய குடிநீர் திட்டம் நிர்வாக இயக்குனர் தகவல்
தேனி : தேனிக்கு நிரந்தர புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது என நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார். நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் நேற்று தேனி பகுதியில் ஆய்வு செய்தார். புதிய பஸ்ஸ்டாண்ட் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். அவர் கூறுகையில், தேனிக்கு நிரந்தர புதிய குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. லோயர் கேம்ப், வைகை அணையில் இருந்து கொண்டு வருவது குறித்து ஆய்வு நடக்கிறது. பஸ்ஸ்டாண்ட் பணிகள் விரைவில் துவங்கும் என்றார். பாதாள சாக்கடை திட்டத்திற்கான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் பணிகளை பார்வையிட் டார்.நகராட்சி தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் இலங்கேஸ்வரன், கமிஷனர் மோனி, பொறியாளர் கணேசன் உட்பட நகராட்சி அலுவலர்கள் உடன் சென்றனர்.