தினமணி 28.04.2010
தேனி புதிய பஸ் நிலைய இடம்: நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் ஆய்வு
தேனி, ஆக. 24: தேனியில் புதிய பஸ் நிலையம் அமையவுள்ள இடத்தில் நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
தேனியில் பெரியகுளம் புறவழிச்சாலையில் சிட்கோ வளாகத்தை அடுத்துள்ள 7.5 ஏக்கர் வனத்துறை நிலம், புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பஸ் நிலைய கட்டுமானப் பணிகளுக்குத் தயாரிக்கப்பட்ட ரூ.16 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந் நிலையில், புதிய பஸ் நிலையம் அமையவுள்ள இடத்தில் சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தேனி நகர குடிநீர் விநியோகத்திற்கு லோயர்கேம்ப் பெரியாறு பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வர திட்ட மதிப்பீடு செய்யப்படும் என்றார் . அப்போது மதுரை நகராட்சிகள் மண்டல நிர்வாக இயக்குநர் அசோகன், பொறியாளர் மருதுபாண்டியன், தேனி நகராட்சித் தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் இலங்கேஸ்வரன், ஆணையர் மோனி, பொறியாளர் கணேசன், நகர அமைப்பு அலுவலர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.