தினமலர் 03.09.2010
சாலை சுத்தப்படுத்தும் பணி நகராட்சி சேர்மன் பார்வை
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி பகுதியில் சாலை சுத்தப்படுத்தும் பணியை சேர்மன் பார்வையிட்டார். விழுப்புரம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த இடங்களில் மீண்டும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாதாள சாக்கடை பணி நடந்ததால் நகரில் பல இடங்களில் மணல் சேர்ந்து வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதையடுத்து மணல் குவியலை அப்புறப் படுத்தும் பணியில் நகராட்சி துப்புரவு பணியாளர் கள் ஈடுபட்டனர். விழுப்புரம் திரு.வி.க.,வீதியில் மணல் குவியலை அப்புறப்படுத்தும் பணியை நகராட்சி சேர்மன் ஜனகராஜ் நேரில் பார்வையிட்டார்.