Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர்மன்றத் தலைவர் ஆய்வு

Print PDF
தினமணி 03.09.2010

நகர்மன்றத் தலைவர் ஆய்வு

விழுப்புரம், செப்.2: விழுப்புரம் திரு.வி.. வீதியில் நகராட்சி ஊழியர்கள் 100 பேர் ஒரேநாளில் மேற்கொண்ட முழு சுகாதாரப் பணியை நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தால் ஆங்காங்கே தேங்கியுள்ள மண், பள்ளங்கள் ஆகியவை பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. எனவே நகராட்சி ஊழியர்கள் அனைவரும் அந்த வீதியில் திரண்டு முழு சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர். தேங்கியிருந்த மண்ணை பெருக்கியெடுத்து டிராக்டரில் எடுத்துச் சென்றனர். பள்ளங்கள் ஜேசிபி எந்திரத்தின் மூலம் சரி செய்யப்பட்டது.

Last Updated on Friday, 03 September 2010 11:06