தினமலர் 06.09.2010
குடிசை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு
தேனி : கம்பத்தில் 4 கோடி ரூபாய் செலவில் குடிசை மேம்பாட்டு திட்டப்பணிகள் தொடங்கி உள்ளன என நகராட்சி கமிஷனர் அய்யப்பன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கம்பத்தில் ஒருங்கிணைந்த நகர்ப்புற குடிசை மேம்பாட்டு திட்டத்தில் 325 வீடுகளுக்கு தலா ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. பயனாளிகள் தங்கள் பங்கு பணத்தை கூடுதலாக போட்டு, தரமான வீடு கட்டிக் கொள்ளலாம். அதேபோல் சிறப்பு ரோடு அமைக்கும் திட் டத்திற்கு 3.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 14 ரோடுகள் சீரமைக்கப்பட உள்ளன என்றார்.