தினமலர் 07.09.2010
வால்பாறையில் நகராட்சிகளின் துணை இயக்குனர் ஆய்வு
வால்பாறை: வால்பாறை நகராட்சியில் ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படவுள்ள ரோடுகளை நகராட்சிகளின் துணைஇயக்குனர் ஆய்வு செய்தார். வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள காஞ்சமலை, நல்லகாத்து, வால்பாறை டவுன் குமரன்ரோடு, அரசு மருத்துவமனை உள்ளிட்டப்பகுதிகளில் பழுதடைந்துள்ள ரோடுகளை நகராட்சிகளின் துணை இயக்குனர் துரைசந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: வால்பாறையில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க ரூ.2 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புக்களின் கீழ் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப்பணி இரண்டு மாதத்திற்கு பின்னர் இந்தப்பணிகள் அனைத்தும் துவங்கப்படும் என்றார். ஆய்வின் போது மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார், பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.