தினமணி 09.09.2010
50 கோடி மதிப்பிலான நிலம்: மாநகராட்சி கையகப்படுத்தியது
சென்னை, செப்.8: சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 50 கோடி மதிப்பிலான 22 கிரவுண்ட் திறந்தவெளி நிலம் புதன்கிழமை கையகப்படுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான திறந்தவெளி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகக கிண்டி ஜவஹர்லால் நேரு சாலையில் இரண்டு இடங்களில் 23 கிரவுண்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஒலிம்பியா டெக்னாலஜி பார்க் நிறுவனத்திடம் 15 கிரவுண்ட் நிலமும், தாமரை டெக் பார்க் நிறுவனத்திடம் 7 கிரவுண்ட் நிலமும் மாநகராட்சிக்குச் சொந்தமான திறந்தவெளி நிலம் இருந்தது.
இவற்றை கையகப்படுத்தி அந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான நிலம் என்று பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 3ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 1,500 கோடி மதிப்பிலான 700 கிரவுண்ட் நிலத்தை மீட்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.