தினமலர் 13.09.2010
மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு
கோவில்பட்டி : கோவில்பட்டியில் மின்மோட்டார் மூ லம் குடிநீரை உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் என கோவில்பட்டி நகராட்சி அறிவித்துள்ளது. கோவில்பட்டி நகரில் 14 ஆயிரத்து 650 குடிநீர் இணைப்புகள் நகராட்சி மூலம் வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோகிக்கப்படும் நாட்களின் நீண்ட இடைவெளியை குறைப்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பொதுமக்கள் தேவைக்கு போக அதிகமாக தண்ணீரை கவனிக்காமல் வடிகால்களில் விடுவதும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும், தோட்டங்களுக்கு பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மின்மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுவதும் தெரிய வந்துள்ளது. எனவே குடிநீருக்கு மின்மோட்டார் பயன்படுத்துவது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், குடிநீர் இணைப்பு 6 மாதத்திற்கு துண்டிக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்