Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரமின்றி செயல்பட்ட ஓட்டல்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினகரன் 17.09.2010

சுகாதாரமின்றி செயல்பட்ட ஓட்டல்களுக்கு நோட்டீஸ்

போடி : போடியில் சுகாதாரமின்றி செயல்பட்ட ஓட்டலை மூட ஆர்.டி.., உத்தரவிட்டதையடுத்து வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். போடி பஸ்ஸ்டாண்ட் மற்றும் சுற்றியுள்ள பல் வேறு ஓட்டல்களில் தென்னை மட்டை , முந்திரி கொட்டை ஓடுகளை வைத்து எரித்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வந்தனர். இதன்மூலம் வெளியேறும் நச்சு புகையால் சுவாசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதாரகேடு ஏற்பட்டது.

போடி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், டவுன் போலீசார், தீயணைப்பு துறையினரும் இணைந்து போடியில் உள்ள ஓட்டல்களில் சோதனை மேற் கொண்டனர். ஓட்டல் சுகாதாரமின்றியும், பாதுகாப்பு இல்லாத நிலையில் தெரிய வந்தது.

இதற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டன. ஓட்டலை மூட ஆர்.டி.., மோகனதாஸ் உத்தரவிட்டதையடுத்து போலீசார் மூலம் வருவாய்த்துறையினர் போடி பஸ் ஸ்டாண் டில் செயல்பட்டுவந்த ஓட்டலை மூடவும், சுகாதாரம் மற்றும் கட்டட உறுதி சான்று பெற்ற பின்பு திறந்து கொள்ளுமாறு நோட்டீஸ் விடுத்தனர்.