Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

Print PDF

தினகரன் 22.09.2010

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

ஆர்.எஸ்.மங்கலம், செப்.22:ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 31 கடைகள் உள்ளன. 29 கடைகளின் உரிமையாளர்கள் மட்டுமே வாடகை முறையாக செலுத்தி உள்ளனர். மற்ற இரண்டு கடைகள் பல மாதமாக வாடகை செலுத்தாததால் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் விவேகானந்தன் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் கடையை பூட்டி சீல் வைத்தனர். ஆர்.எஸ்.மங்கலம் காவல்துறை ஆய்வாளர் பில்லத்தியான் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.