தினமலர் 28.09.2010
பன்றிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை
மதுரை: மதுரை நகரை குப்பை இல்லா நகரமாக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நகரில் 1, 70, 33, 34 ஆகிய வார்டுகளில் மேயர் தேன்மொழி மக்கள் குறைகளை கேட்டறிந்தார். வைகை ஆற்றின் இருபுறங்களிலும் கோழிக் கழிவுகளையும், குப்பைகளையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். பூந்தோட்டம், பேச்சியம்மன் படித்துறை, ஆனந்த பவனம் பகுதிகளை பார்வையிட்டார். கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். அப்பகுதியில் பன்றிகள் அதிகளவு வளர்க்கப்படுவதை அறிந்த அவர் பன்றி வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் சக்திவேல், நகர்நல அலுவலர் சுப்ரமணியன், மண்டல தலைவர் நாகராஜன், கவுன்சிலர்கள் சிலுவை, நீலமேகம், மாரியப்பன் கலந்து கொண்டனர்.