தினமணி 28.09.2010
அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
ஒட்டன்சத்திரம், செப். 27: ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில். பேரூராட்சி அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதனையடுத்து, பேரூராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை செயல் அலுவலர் ஜெயக்கொடி மற்றும் அலுவலர்கள் வார்டு வாரியாகச் சென்று காவல் துறை உதவியுடன், அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளைத் துண்டித்து வருகின்றனர்.
மொத்தமுள்ள 18 வார்டுகளிலும் 132 இணைப்புகள் பேரூராட்சி அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 46 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீதிமுள்ள இணைப்புகள் இன்னும் 3 நாள்களில் துண்டிக்கப்படும் என்று செயல் அலுவலர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.