Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் திருட்டு: கலெக்டர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 29.09.2010

குடிநீர் திருட்டு: கலெக்டர் எச்சரிக்கை

மதுரை: மதுரை மாவட்டத்தில் குடியிருப்புகளில் மின்மோட்டார் பொருத்தி சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் திருடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான கூட்டம் கலெக்டர் காமராஜ் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: மதுரை நகருக்கு வைகை அணையில் இருந்து, ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் சீராக வினியோகிக்க படுகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோக நேரத்தில், குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் திருடப்படுகிறது. இதனால் வேறு சில பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கிறது. எனவே சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் பொருத்தியிருப்பது தெரிந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றார்.