தினகரன் 04.10.2010
குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் நேரில் ஆய்வு
தர்மபுரி, அக்.4: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குனர் ஹிதேஷ்குமார் மக்வானா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒகேனக்கல்லில் அமைக்கப்பட்டு வரும் முதன்மை நீரேற்று நிலையம் உள்பட ஒகேனக்கல் திட்டப்பணிகளை நடைபெறும் பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது பணிகளின் தற்போதைய நிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்காக 2&ம் கட்ட தொகையை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார், ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட முதன்மை பொறியாளர் ரவிச்சந்திரன், நிர்வாக பொறியாளர் திருமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணி
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குனர் ஹிதேஷ்குமார் மக்வானா ஒகேனக்கல்லில் ஆய்வு செய்கிறார். அவரிடம் திட்ட பணிகள் குறித்து வரைபடங்கள் மூலம் அதிகாரிகள் விளக்குகின்றனர்.
அப்போது பணிகளின் தற்போதைய நிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்காக 2&ம் கட்ட தொகையை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார், ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட முதன்மை பொறியாளர் ரவிச்சந்திரன், நிர்வாக பொறியாளர் திருமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.