Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதி இன்றி டிஜிட்டல் போர்டு வைத்தால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமலர் 04.10.2010

அனுமதி இன்றி டிஜிட்டல் போர்டு வைத்தால் கடும் நடவடிக்கை

தூத்துக்குடி : தூத்துக்குடி நகரில் அனுமதி இன்றி டிஜிட்டல் போர்டு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏஎஸ்பி தெரிவித்தார். தூத்துக்குடி நகரில் பல இடங்களில் ஏராளமான டிஜிட்டல் போர்டுகள் இருந்து வருகிறது இந்த டிஜிட்டல் போர்டினால் பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர், மேலும் ராட்சத டிஜிட்டல் போர்டுகள் கீழே விழும் நிலையில் காணப்படுகிறது அவ்வாறு கீழே விழும் பட்சத்தில் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான புகார்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வண்ணம் உள்ளது இதனை தடுப்பதற்காக நேற்று தூத்துக்குடி தென் பாகம் போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம் நடந்தது இந்த கூட்டத்திற்கு ஏஎஸ்பி சோனல் சந்திரா தலைமை வகித்தார். இதில் திமுக., அதிமுக., காங்கிரஸ், சமக., பாமக., மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஏஎஸ்பி.,நிருபர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடி மாநகரில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல்போர்டுகள் அதிக அளவில் காணப்படுகிறது இது பொது மக்களுக்கு இடையூறாக காணப்படுகிறது.டிஜிட்டல் போர்டு வைப்பதற்கு மாநகராட்சியின் முன் அனுமதி பெற வே ண்டும்.விழா நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் டிஜிட்டல் போர்டு வைக்க வேண்டும்.விழா முடிந்த இர ண்டு நாட்கள் கழித்து டிஜிட்டல் போர்டுகளை எடுத்து விட வேண்டும். டிஜிட்டல் போர்டுகள் ஆலோசனை கூட்டத்தில் கூறிய அளவில் தான் வைக்க வேண்டும் இது வரும் 11ம் தேதிமுதல் அமல்படுத்தபடுகிறது.இதனை மீறுபவர்கள் மீது கடும் நடடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.