Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.19 கோடி கேட்டு மாநகராட்சி கடிதம் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் ஆய்வு

Print PDF

தினகரன் 13.10.2010

ரூ.19 கோடி கேட்டு மாநகராட்சி கடிதம் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் ஆய்வு

நெல்லை, அக். 13: நெல்லையில் சாலை களை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கடி தம் எழுதியது. இதன் அடிப்படையில் நெல்லை மாநகராட்சியில் 60 சாலைகளை சீரமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலப்பாளையம் மண்டலத்தில் குடிநீர் குழாய் களை மாற்றுதல், சாந்திநகர், தியாகராஜநகரில் மழைநீர் வடிகால் வசதிகள், நீரேற்று நிலையங்களில் உரிய வசதி கள் உள்ளிட்ட 12 பணிகளுக்காக ரூ.19 கோடியை மாநகராட்சி கேட்டுள்ளது. இதையடுத்து நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகரன் நேற்று நெல் லைக்கு ஆய்வு மேற்கொள்ள வந்தார்.

மேம்பாடு பணிகள் நடக்கவுள்ள நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் புதிய பஸ் நிலையம், மாநகராட்சி வாகன காப்பகம், திருமலை கொழுந்துபுரம், மணப்படை வீடு நீரேற்று நிலையங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் இயக்குனர் அளிக் கும் அறிக்கையின் அடிப்படையில் நெல்லை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வின்போது கமிஷனர் சுப்பையன், சுகாதார ஆய்வாளர் அரசகுமார் உடனிருந்தனர்.