மாலை மலர் 19.10.2010
இலவச கழிப்பிடத்தில் காசு வசூலித்தவர் கைது
சென்னை, அக். 19- சென்னை மாநகராட்சி புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள கார்த்திகேயன் இன்று சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள மாநகராட்சி இலவச கழிப்பிடத்தில் அன்வர் (55) என்பவர் காசு வசூலித்ததை கண்டுபிடித்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து அனுமதி இல்லாமல் காசு வசூலித்த அன்வர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.