தினமணி 20.10.2010
நடைபாதை வியாபாரிகளுக்கு உரிம கட்டண தீர்மானம் ஒத்திவைப்பு
கோவை
, அக்.19: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கக் கட்டணம் நிர்ணயிக்கும் தீர்மானம் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.கோவை மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது
. தலைவர் அ.நந்தகுமார் தலைமை வகித்தார். உதவி ஆணையர் (வருவாய்) சுந்தரராஜன் மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் வரி விதிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான 9 தீர்மானங்கள் மீது விவாதம் நடந்தது.மாநகராட்சி பள்ளிகளில் தூய்மைப் பணி
, காவல் பணி மேற்கொள்ள பணியாளர்கள் மற்றும் காவலர்களை நியமிக்க ரூ. 45 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.மாநகராட்சி எல்லையில் உள்ள
3 ஆயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு தினசரி ரூ. 40 பெற்று உரிமம் வழங்க ஒப்புதல் கோரிய தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வியாபாரம் நடைபெறும் வகையிலான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்த பின்னர்
, உரிம கட்டணம் குறித்து விவாதிக்கலாம் என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.பூ மார்க்கெட் கடை ஏலம்
, காந்திபுரம் மத்திய பேருந்து நிலைய கடைகளின் பயனாளிகள் பெயர் மாற்றம் செய்தல், மாநகராட்சி மேற்கு மண்டல வணிக வளாக கடைகளை ஏலதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்தல் ஆகிய பொருள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நிதிக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், ராஜேந்திர பிரபு, ஹேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.