Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் 5 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி 22.10.2010

நெல்லையில் 5 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருநெல்வேலி,அக்.21: சொத்து வரி செலுத்தாததால், பாளையங்கோட்டை பகுதியில் 5 கட்டடங்களின் குடிநீர் இணைப்பு வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி சொத்து வரி,குடிநீர் கட்டணம் ஆகியவற்றை வசூல் செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் இவற்றை மாநகராட்சிக்கு செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாளையங்கோட்டை பால்ராவுத்தர் தெரு,பிச்சுவனத் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு ஆகிய இடங்களில் 4 வீடுகளின் குடிநீர் இணைப்பையும், திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு வணிகக் கட்டடத்தின் குடிநீர் இணைப்பையும் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை துண்டித்தனர்.