Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முறைகேடாக வீடு ஒதுக்கப்பட்ட பிரச்னை ஆதர்ஷ் கட்டிடத்துக்கு மின், குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்                     01.11.2010

முறைகேடாக வீடு ஒதுக்கப்பட்ட பிரச்னை ஆதர்ஷ் கட்டிடத்துக்கு மின், குடிநீர் இணைப்பு துண்டிப்பு

கொலாபா, நவ. 1: சர்ச்சையில் சிக்கிய ஆதர்ஷ் கட்டிடத்துக்கு 24 மணி நேரத்திற் குள் மின் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி மற்றும் பெஸ்ட் நோட்டீஸ் அனுப் பியது.

கார்கில் போர் வீரர்களுக்கு தென்மும்பை கொலாபாவில் குடியிருப்பு கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்தில் ஆதர்ஷ் ஹவுசிங் சொசைட்டி என்ற பெயரில் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது. 6 மாடிகள் கட்ட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் விதிமுறைகள் மீறப்பட்டு 31 மாடிகள் கட்டப்பட்டது.

மேலும் இந்த கட்டிடத்தில் அரசியல் தலைவர்கள், ஓய்வு பெற்ற ராணுவ முன்னாள் தளபதிகள், மாநில அரசு உயரதிகாரிகளுக்கு வீடுகள் முறைகேடாக ஒதுக்கப்பட்ட மோசடி சமீபத்தில் அம்பலமானது. முதல்வர் அசோக் சவானின் மாமியார் உள்பட 3 உறவினர்களுக்கும் இந்த கட்டிடத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னை தீவிரமானதை தொடர்ந்து முதல்வர் அசோக் சவானை டெல்லிக்கு வர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். நேற்று முன்தினம் டெல்லி சென்ற சவான் சோனியா காந்தியிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

சவான் உறவினர்களுக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் ஏ.கே.அந்தோணியை சோனியா காந்தி கேட்டு கொண்டார். இதன் பிறகே காங்கிரஸ் தலைமை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கிறது.

இந்நிலையில், சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஆதர்ஷ் சொசைட்டிக்கு மின் மற்றும் குடிநீர் இணைப்பை துண் டிப்பதற்கான நோட்டீஸை மும்பை மாநகராட்சியின் குடிநீர் விநியோக பிரிவு மற்றும் மின் இணைப்பு வழங்கும் பெஸ்ட் நிறுவனம் சொசைட்டிக்கு அனுப் பியது.

இது பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், 1396984945 24 மணி நேரத்திற்குள் குடிநீர் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என நோட்டீசில் எச்சரிக்கப் பட்டுள்ளது" என்றார்.

கட்டிடத்துக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழை அசோக் சவான் உத்தரவின் பேரில் மும்பை பெருநகர மண்டல வளர்ச்சி ஆணையம் ரத்து செய்தது. இதை தொடர்ந்து குடிநீர் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ஆதர்ஷ் சொசைட்டி கட்டப்பட்டதில் கடலோர பாதுகாப்பு மண்டல விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பாக விவாதிக்க வரும் 4ம் தேதி மகாராஷ்டிரா கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

இது தொடர்பாக ஆணையத்தின் செயலாளர் வல்சா நாயர் சிங் கூறுகையில்,"விதிமுறைகள் மீறல் தொடர்பாக விவாதித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். முறையான அனுமதியை பெற ஆணையத்தை யாரும் அணுகவில்லை" என்றார்.