தினமலர் 01.11.2010
தாம்பரம் மேம்பாட்டு பணிகள் ஆய்வு
தாம்பரம் : தாம்பரம் நகராட்சிப் பகுதியில் நடக்கும், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துவங்கும் முன், குறிப்பிட்ட இடத்தில் வீட்டு இணைப்பு, சாலை போன்ற அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்துவிட்டு அடுத்த இடத்தில் பணிகளை துவக்க வேண்டும்.குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.