தினகரன் 04.11.2010
மின் தகன கூடத்தில் ஆய்வு
போடி, நவ.4 போடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார தகன கூடத்தில், முதல் கட்ட சோதனை நிகழ்ச்சி நடந்தது. போடியில் நகராட்சி சார்பில் ரூ.42 லட்சம் செலவில் சுடுகாட்டில், மின் தகன மேடை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான இயந்திரங்கள் நிறுவப்பட்டு நேற்று முதற்கட்டமாக சோதனை நடத்தப்பட்டது. உடலை எரிக்க தேவையான 900 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ளதா என நகராட்சி ஆணையாளர் சரவணகுமார், பொறியாளர் குருசாமி ஆய்வு செய்தனர்.
மதுரை மண்டல அளவில் முதல் எரியூட்டும் நிலையமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த மின்சார தகன கூடம், மாசுகட்டுப்பாட்டு வாரிய சோதனைக்கு பின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.