Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடைகளை அடைக்க நிரந்தர தொண்டுப்பட்டி

Print PDF

தினகரன்               08.11.2010

ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடைகளை அடைக்க நிரந்தர தொண்டுப்பட்டி

குன்னூர்,நவ.8: குன்னூர் பஸ் நிலையம், கேஸ் பஜார், டி.டி.கே.ரோடு, மவுண்ட் ரோடு, பெட்போர்டு, சிம்ஸ்பார்க் உள்ளிட்ட பகுதிகளில் ஆடு மற்றும் மாடுகள் சாலைகளில் நடமாடி வருவதால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. ஏற்கனவே வாகனங்களை நிறுத்த இடமின்றி சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இந்த வளர்ப்பு கால் நடைகளால் மேலும் இடையூறுகள் ஏற்படுவதாக எழு ந்த புகாரின் பேரில் நகராட்சி சார்பில் உழவர் சந்தையை யொட்டி உள்ள பகுதியில் தொண்டுபட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது. அந்த இட த்தில் நிரந்தர கட்டிடம் கட் டப்பட்டுவருகிறது. விரைவில் இப்பணியை நிறைவு செய்து சாலைகளில் நட மாடி வரும் கால்நடை களை பிடித்து இதில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.