Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அய்யனார் குளத்தை சீரமைக்க நகர்மன்றத் தலைவர் உத்தரவு

Print PDF

தினமணி               08.11.2010

அய்யனார் குளத்தை சீரமைக்க நகர்மன்றத் தலைவர் உத்தரவு

விழுப்புரம், நவ. 7: விழுப்புரம் நகரில் இருக்கும் அய்யனார் குளத்தை சீரமைக்க நகராட்சி அலுவலர்களுக்கு நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ் உத்தரவிட்டார்.

நகரில் உள்ள மிக முக்கியமான இந்த குளத்தில் புதர்கள் மண்டியும், குப்பைகள் கொட்டப்பட்டும் புதையுண்டு வரும் நிலையில் உள்ள இந்த குளத்தில் தண்ணீர் தேங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே அந்த குளத்தை நகர்மன்றத் தலைவர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். குளத்தில் உள்ள புதர்களை அகற்றினால்தான் தண்ணீர் தேங்கும் என்பதால் அவற்றை உடனே அகற்ற உத்தரவிட்டார். மழைக் காலத்திலேயே இந்த பணியைச் செய்தால்தான் தண்ணீர் நிரம்பும் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது நகராட்சி ஓவர்சீயர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.