Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ20.06 கோடியில் சாலைகள் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் ஆய்வு

Print PDF

தினகரன்              10.09.2010

ரூ20.06 கோடியில் சாலைகள் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் ஆய்வு

திருப்பூர், நவ.10: சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ.20 கோடி பணிகளுக்கான டெண்டர் மனு பரிசீலனை நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகரன் இதனை ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ், சாலை களை சீரமைக்க தமிழக அரசு ரூ.20.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை தரத்துடன் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், இத்திட்டப்பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கான்ட்ராக்டர்களுடன் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில தினங்க ளுக்கு முன்னர் ஆலோசனை நடத்தினர். சாலைகள் மேற்கொள்ளும் பணிக்கு கான்ட்ராக்டர்களுக்கு தேவையான தகுதிகள்; இருக்க வேண்டிய கருவிகள் உள்ளிட்டவை தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. வரும் பிப்ரவரி மாதத்துக்குள் இந்த பணி களை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, டெண்டர்கள் பெறப்பட்டன. இந்த டெண்டர் மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகரன் கலந்து கொண்டு, டெண்டர் மனுக்களை பரிசீலித்தார். மேலும் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு பணிகளை அவர் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஜெயலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் கவுதமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.