Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் தேங்குவது குறித்து ஆய்வு

Print PDF

தினமலர்          10.11.2010

மழைநீர் தேங்குவது குறித்து ஆய்வு

மதுரை : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிறுமழை பெய்தால்கூட குளம் போல் தேங்குவது வழக்கமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகனங்களும் பழுதாகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்வதால், இப்பகுதி தவிக்கிறது. இதுகுறித்து நேற்று மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், போக்குவரத்து துணை கமிஷனர் ராஜேந்திரன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆர்.எம்.எஸ். ரோடு முதல் மேலவாசல் குடியிருப்பு வரை தண்ணீர் தேங்காமல் இருக்க, கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டனர்.