Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொது இடத்தில் புகைத்த 19 பேருக்கு அபராதம்

Print PDF

தினமணி                    16.11.2010

பொது இடத்தில் புகைத்த 19 பேருக்கு அபராதம்

வேலூர், நவ. 15: வேலூர் நகரில் பொது இடங்களில் புகைப்பிடித்த 19 பேருக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி நகர் நல அலுவலர் கோவிந்தன் மற்றும் ஊழியர்கள், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சாரதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தடையை மீறி பொது இடத்தில் புகைப்பிடித்த 19 பேரிடம் இருந்தும் தலா ரூ. 100 வீதம் அபராதம் வசூலித்தனர். பல மாதங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் திடீரென மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது, பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.