Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

25ம் தேதி கையெழுத்தாகிறது கோலாலம்பூர் மேயருடன் சென்னை மேயர் ஒப்பந்தம்

Print PDF

தினகரன்                23.11.2010

25ம் தேதி கையெழுத்தாகிறது கோலாலம்பூர் மேயருடன் சென்னை மேயர் ஒப்பந்தம்

சென்னை, நவ. 23: மலேசிய தலைநகரான கோலாலம்பூர், சென்னை மாநகர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் துணை முதல்வர் மு..ஸ்டாலின் முன்னிலையில் அந்நாட்டு அமைச்சர்களுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. அப்போது தமிழர்களின் பணி பாதுகாப்பு, கலாசாரம், கல்வி போன்றவற்றில் சென்னை மாநகரும், கோலாலம்பூர் மாநகரமும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வரும் 25ம் தேதி அங்கு நடக்கும் கூட்டத்தில் மேயர் மா.சுப்பிரமணியனும் கோலாலம்பூர் மேயரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர். இதற்காக அவரும், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி ஆகியோர் அங்கு செல்கிறார்கள்.