Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொது இடத்தில் புகைப்பிடித்தால் அபராதம்

Print PDF

தினகரன்           24.11.2010

பொது இடத்தில் புகைப்பிடித்தால் அபராதம்

வால்பாறை, நவ.24: வால்பாறை நகராட்சி செயல் அலுவலர் ராஜ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:வால்பாறை நகரில் பொது இடங்கள் மற்றும் டீ கடைகளில் சிகரெட் மற்றும் பீடி குடித்தால் அபராதம் விதிக்கப்படும். மேலும் நகரில் சுற்றிதிரியும் மாடுகளுக்கு ரூ.250 அபராதமும், தடைவிதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வாங்கி செல்வோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இதற்கான கண்காணிப்பில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.