Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேட்டை 45, 46, 47வது வார்டுகளில் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கணும்!

Print PDF

தினமலர்               24.11.2010

பேட்டை 45, 46, 47வது வார்டுகளில் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கணும்!

திருநெல்வேலி : பேட்டை 45, 46, 47வது வார்டுகளில் குறைகளை களைய மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் துணைமேயரிடம் மனுக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், நிர்வாகிகள் மைதீன்பிச்சை, ராமையா அளித்துள்ள மனுவில், "நெல்லை மாநகராட்சி பேட்டை 47வது வார்டு பாண்டியாபுரம் தெற்கு தெரு, கருங்காடு ரோடு பகுதியில் இரவு 7 மணிக்கு மின் விளக்கு போடப்பட்டு இரவு 10 மணிக்கு அணைக்கப்படுகிறது. மர்ம நபர்கள் மின் விளக்கை அணைப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் திருட்டு, அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது.

47வது வார்டு பாண்டியாபுரம் தெருவில் வாய்க்காலில் தூர்வாரி, ஆழப்படுத்தவேண்டும். தடுப்புச்சுவர் கட்டவேண்டும். நடுவில் மக்கள் நடமாட பாலம் கட்டவேண்டும். நல்ல தண்ணீர் பம்பை சுற்றிலும் சாக்கடை நீர் வருவதால் அதை சரிசெய்து சிமெண்ட் தளம் போடவேண்டும். பாண்டியாபுரம் தெற்கு தெரு பஸ்ஸ்டாப் முன்புள்ள வாறுகால் பாலத்தை சீரமைக்கவேண்டும். புதுக்கிராமம் சுந்தரவிநாயகர் கோயில் தெரு, பாண்டியாபுரம் வடக்கு தெருவில் வாறுகால் இல்லாமல் சாக்கடை நீர் வெளியேறி வீட்டுக்குள் வருகிறது. வாறுகால் கட்டவேண்டும். அசோகர் கீழத்தெருவில் கழிப்பிடத்தை சீரமைக்கவேண்டும். அசோகர் தெற்கு தெரு, வடக்கு தெருவில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. அந்த பள்ளத்தில் மழைநீர், சாக்கடை நீர் வருகிறது. பள்ளத்தை சரிசெய்து சீரமைக்கவேண்டும். பசும்பொன் தெருவில் பாழடைந்த கழிப்பிடத்தை சீரமைக்கவேண்டும். 45வது வார்டு, 46வது வார்டு சந்தனமாரியம்மன் கோயில், எஸ்.வி.கே.படையாச்சி தெருவில் பெண்கள் கழிப்பிடத்தை சீரமைக்கவேண்டும். பேட்டை சேரன்மகாதேவி ரோட்டில் இருந்த நல்ல தண்ணீர் குழாய் திடீரென மாயமாகிவிட்டது. அந்த இடத்தில் நல்ல தண்ணீர் குழாயை அமைக்கவேண்டும். ஆண்டாள்புரம் கழிப்பிடத்தில் கதவுகள் இல்லை. அதை சரிசெய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.