Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலிமனை தீர்வை ரூ.1.25 லட்சம் கட்ட சொல்வதா : தவறு செய்ய மக்களை தூண்டுவது மாநகராட்சி

Print PDF

தினமலர்           24.11.2010

காலிமனை தீர்வை ரூ.1.25 லட்சம் கட்ட சொல்வதா : தவறு செய்ய மக்களை தூண்டுவது மாநகராட்சி

திருநெல்வேலி : புதிதாக கட்டும் வீடுகளுக்கு காலிமனை தீர்வை 13 அரையாண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை கட்ட வற்புறுத்துவதால் மாநகராட்சி அனுமதியில்லாமல் வீடு கட்டி விட்டு ரூ.5 ஆயிரத்தை அபராதமாக செலுத்திவிடுகின்றனர் என பாளை., மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். பாளை., மண்டல மாநகராட்சி ஆலோசனை கூட்டம் மண்டல தலைவர் சுப.சீத்தாராமன் தலைமையில் நடந்தது. உதவிக்கமிஷனர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு: ரேவதிஅசோக்: தயாபரன் தெருவில் ஓடை கட்டுவதற்கு எஸ்டிமேட் போட்டு 4 ஆண்டுகள் ஆச்சு. பணிகள் நடைபெறவில்லை. ரோடுகளும் மோசமான நிலையில் உள்ளது.